சந்தையில் சேகரிக்கப்பட்ட எண்ணெய் மாதிரியில் எப்லாடொக்சின் பதார்த்தம் கலந்தமை கண்டுபிடிக்கப்படவில்லை
விநியோகிக்கப்பட்ட நிலையில் சந்தையில் இருந்து சேகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரியில் எப்லாடொக்சின் பதார்த்தம் கலந்தமை கண்டுபிடிக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யில் எப்லாடொக்சின் பதார்த்தம் கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
இதன்போது 15 மாவட்டங்களில் இருந்து 100 மாதிரிகள் தெங்கு ஆராய்ச்சி நிறுவகத்தினால் சேகரிக்கப்பட்டன.
எனினும் இந்த மாதிரிகளில் எப்லாடொக்சின் பதார்த்தம் அடங்கியிருக்கவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.