ராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் மேற்கொள்ளப்படாது
எதிர்வரும் காலங்களில் ராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் மேற்கொள்ளப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் காணப்படும் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் என்பனவற்றிற்கு அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் நண்பர்களை நியமிக்கும் வழக்கத்தை ஒழித்து, தகுதியானவர்களுக்கு மட்டும் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதான நாடு ஒன்றில் கடமையாற்றி வரும் இட்டைக் குடியுரிமை கொண்ட தூதுவர் ஒருவர் அடிக்கடி களியாட்டங்களை நடாத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி இந்தியா, சீனா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு புதிய தூதரக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
