கடிதங்களில் கையெழுத்திட மட்டுமேயான அமைச்சு பதவி எனக்கு தேவையில்லை : சீ.பி.ரத்நாயக்க
அமைச்சரவையில் வழங்கும் கடிதங்களில் கையெழுத்திடவும் அல்லது நாடாளுமன்றத்தில் பதிலளிக்கவும் மாத்திரம் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி தேவையில்லை என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க (C.B.Rathnayake) தெரிவித்துள்ளார்.
பணியாற்ற முடிந்தால், பணியாற்ற வேண்டும். வேலை செய்யும் போது காலை பிடித்து இழுக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
வரவு செலவுத்திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
சில நேரம் மக்கள் எம்மை நிராகரிக்கலாம். எமக்கு அமைச்சுக்களை கைவிட செல்ல வேண்டுமாயின் எந்த பிரச்சினைகளும் இல்லை. எனினும் நான் நுவரெலியா மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும். முழு நாட்டு மக்களுக்கும் நான் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் சீ.பி. ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri