மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழி முறைகள் இல்லை:சிறீசற்குணராஜா(Photos)
தற்போதைய மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழி முறைகள் காணப்படுவதில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறீசற்குணராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் தகைசார், வரலாற்றுத்துறைப் பேராசியர் சி.பத்மநாதனின் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்று யாழ்.பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுள்ளது.
நூல் வெளியீட்டு விழா
இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத்துறை ஏற்பாட்டில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் தலைமை உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக மகாபாரதம் , இராமாயணத்தை, தற்போதுள்ள மாணவர் சமூகமானது சினிமா மூலம் தொலைக்காட்சி நாடகங்கள் மூலம் மாத்திரமே பார்வையிடக்கூடிய நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக நீண்ட கால வரலாற்றை கொண்ட நமது இந்து மதத்தின் வரலாறுகளை
தற்போதுள்ள இளைஞர்கள் அறிவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவாக காணப்படுகிறது.”என கூறியுள்ளார்.








