எதிர்க்கட்சிகள் மக்களின் ஆணையை மதிக்க வேண்டும்
எதிர்க்கட்சிகள் மக்களின் ஆணையை மதிக்க வேண்டுமென சுகாதார மற்றும் தொடர்பாடல் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்தவொரு உள்ளுராட்சி மன்றத்திலும் ஆட்சி அமைக்க மக்கள் ஆணை வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி என ஒர் கட்சி கிடையாது எனவும் அவை தனித்தனியாக தங்களது கொள்கைகளை பிரசாரம் செய்து தேர்தலில் போட்டியிட்டவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் எவ்வாறு எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து ஆட்சி செய்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி அமைக்க இடமளிக்க வேண்டும் எனவும் ஆட்சி நடாத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri