38 நாட்களாக காணாமல்போயுள்ள சிறுவர்கள்!பொதுமக்களிடம் உதவிகோரியுள்ள பொலிஸார்
திருகோணமலை - கொடதெனியாவ – வத்தேமுல்ல, பாந்துராகொட பிரதேசத்தில் காணாமல்போன இரு பாடசாலை மாணவர்கள் தொடர்பில் 38 நாட்களாகியும் எந்ந தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த நவம்பர் 23 ஆம் திகதி 10 மற்றும் 12 வயதுகளையுடைய சகோதரர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர்.
காணாமல்போன சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை ஊடகங்கள் மூலமாக பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை,சிறுவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071-8 592 867 அல்லது 071-8 592 868 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
