உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
உப்பு இறக்குமதி செய்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சினாலோ அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்களினாலோ எவ்வித இடையூறுகளும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவை பதில் பணிப்பாளர் நாயகம் ரீ.பி. ஆனந்த ஜயலால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உப்பு இறக்குமதி செய்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களினால் பல்வேறு இடையூறுகள் விளைவிக்கப்படுவதாக போலிச் செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான எவ்வித இடையூறுகளோ அல்லது தடைகளோ உப்பு இறக்குமதி செய்வதற்கு கிடையாது என அறிவித்துள்ளார்.
மேலும் உப்பு இறக்குமதி செய்வதற்காக கடந்த 22ம் திகதி வரையில் 117 பேர் விண்ணப்பித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 150000 மெற்றிக் தொன் உப்பு இறக:குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகஅவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உப்பு துறைமுகத்தை அடைந்ததன் பின்னர் அவற்றை வேகமாக விடுவிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.
