பொதுத் தேர்தல் நடத்த பணமில்லை! ஜனாதிபதி திட்டவட்டம்
பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு போதியளவு பணமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்குழுக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்றையதினம் (22.07.2024) நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதியளவு பணமில்லை
பொதுத் தேர்தல் குறித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கூறி வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எனினும், பொதுத் தேர்தல் நடாத்துவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நடாத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் பத்து பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
