சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் இன்று (21) தோற்கடிக்கப்பட்டது.
சற்றுமுன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் பதிவாகின.
இந்நிலையில் 42 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் விவாதம்
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் போது செயற்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் மூன்று நாட்களாக நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் அனைவரும் கலந்துகொண்டு வாக்களித்ததுடன் இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
