முழு அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை! - ரணில் விக்கிரமசிங்க
முழு அரசாங்கத்துக்கும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சஜித் அணியால் சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் காணப்படும் கருத்து வேறுபாட்டை தீர்க்க அரசாங்கத்துக்கு உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
நான், எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால், யாருக்கு எதிராகவும் இந்நேரத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்திருக்கமாட்டேன். இது முட்டாள்தனமான தீர்மானமாகும்.
அவ்வாறே இருக்கமுடியாது, நாளுக்கு நாள் மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கும் என்றார்.
“இது, உதயகம்மன் பிலவுக்கும் மாற்று சக்தியினருக்கும் (சாஹர காரியவசம்) ஆகிய இருவருக்கு இடையிலான முரண்பாடுகளை இல்லாமற் செய்யும் நடவடிக்கையாகும்” என்றார்.
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan