எரிபொருள் விலை உயர்வு! - அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று கையளிப்பு
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 40 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.
ஒரு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்படும்போது, அது ஐந்து நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஆணைக் குறிப்பில் சேர்க்கப்பட வேண்டும்.
எரிபொருள் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினர், அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை, அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. இதனால் ஆளும் கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் தலைதூக்கின.
குறிப்பாக ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை பகிரங்கமாக முன்வைத்தார்.
இவ்வாறான நிலையில், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்து.