முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இனி 95 ஒக்டேன் பெற்றோல் இல்லை
முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 95 ஒக்டேன் வழங்குவதை இடைநிறுத்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையொன்றை சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அனுப்பியுள்ளது.
ஒருசில முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தங்கள் வண்டிகளுக்கு நிரப்பும் சாக்கில் 95 ஒக்டேன் பெற்றோலைப் பெற்று அதனை அதிக விலைக்கு வேறு நபர்களுக்கு விற்பனை செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனையடுத்தே பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் 6142 மெட்ரிக் தொன் அளவிலேயே 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan