முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இனி 95 ஒக்டேன் பெற்றோல் இல்லை
முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 95 ஒக்டேன் வழங்குவதை இடைநிறுத்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையொன்றை சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அனுப்பியுள்ளது.
ஒருசில முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தங்கள் வண்டிகளுக்கு நிரப்பும் சாக்கில் 95 ஒக்டேன் பெற்றோலைப் பெற்று அதனை அதிக விலைக்கு வேறு நபர்களுக்கு விற்பனை செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனையடுத்தே பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் 6142 மெட்ரிக் தொன் அளவிலேயே 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam