இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 9 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!
ஜெனினியில், இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினால் இஸ்ரேலுடனான பாதுகாப்பு உறவுகளை பாலஸ்தீன தலைவர்கள் துண்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் 60 வயது பெண் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வன்முறை தாக்குதல்கள்
இந்நிலையில் இவ்வாறான வன்முறை தாக்குதல்கள் தொடர்ந்தும் தீவிரமடையும் நிலையில் இவற்றை தடுப்பதற்கான சர்வதேச முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.