நிலாவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்
திருகோணமலை, நிலாவெளி பிரதான வீதியில் அலஸ்தோட்டம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (24) இரவு இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் மாலை தொடக்கம் அடைமழை பெய்துவந்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி இன்னுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி வீதியில் நிறுத்தி வைக்கட்டிருந்த காருடன் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விபத்துக்களான இரு முச்சக்கர வண்டிகளில் ஒரு முச்சக்கர வண்டியின் சாரதியே பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri