நிலாவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்
திருகோணமலை, நிலாவெளி பிரதான வீதியில் அலஸ்தோட்டம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (24) இரவு இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் மாலை தொடக்கம் அடைமழை பெய்துவந்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி இன்னுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி வீதியில் நிறுத்தி வைக்கட்டிருந்த காருடன் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விபத்துக்களான இரு முச்சக்கர வண்டிகளில் ஒரு முச்சக்கர வண்டியின் சாரதியே பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
