நிலாவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்
திருகோணமலை, நிலாவெளி பிரதான வீதியில் அலஸ்தோட்டம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (24) இரவு இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் மாலை தொடக்கம் அடைமழை பெய்துவந்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி இன்னுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி வீதியில் நிறுத்தி வைக்கட்டிருந்த காருடன் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விபத்துக்களான இரு முச்சக்கர வண்டிகளில் ஒரு முச்சக்கர வண்டியின் சாரதியே பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam