சிங்கள தரப்புக்கு விழுந்த மரண அடி!! திக்குமுக்காடும் கோட்டாபய - ஆராய்கிறது நிஜக்கண் நிகழ்ச்சி
இலங்கை அரசியல் பரப்புக்குள் பெரும் ஆர்ப்பரித்த அலையாக உருவெடுத்து வந்த கோட்டாபய ராஜபக்ச மெல்ல மெல்ல தன் செல்வாக்கை இழந்து கொண்டிருக்கும் சூழலை எட்டியிருக்கிறார்.
இலங்கை அரசியலில் பெரும் ஹீரோவாக தென்னிலங்கை ஊடகங்களால் புடம் போட்டு காட்டப்பட்டு, பௌத்த சிங்கள மீட்பர்களின் தேவனாக சித்தரிக்கப்பட்டவர் தான் இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
ஆனால், அத்தனையையும தலைகீழாக மாற்றியிருக்கிறது அண்மைய நிகழ்வுகள்.
முன்னைய மைத்திரி ரணில் அரசின் குறைகளிலிருந்து தங்கள் வளர்ச்சியினை கட்டமைத்தார்கள் ராஜபக்சர்கள். ஈஸ்டர் தாக்குதல்கள் ராஜபக்ச தரப்புக்கு பெரும் ஆயுதமாக மாறியிருந்தது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்னும் கோசத்தை கையிலெடுத்துக் கொண்டு விகாரைகள், பௌத்த மத குருமார்கள் என்று, தென்னிலங்கை எங்கும் சுழன்று சூறாவளியாக பிரச்சாரம் செய்தார்கள்.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது நிஜக்கண் நிகழ்ச்சி,
அறிவுக்கரசிக்கு தரமான பதிலடி கொடுத்த ஈஸ்வரி, ஷாக்கில் கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri