மின்சார கட்டணங்களை உயர்த்துவதனால் 45 பில்லியன் ரூபா நட்டம்: நிஹால் வீரரட்ன தகவல்
மின்சார கட்டணங்களை உயர்த்துவதன் காரணமாக 45 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மின்சார கட்டணங்கள் 75 வீதத்தினால் உயர்த்தப்பட்டால் இலங்கை மின்சார சபைக்கு வருடாந்தம் 45 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என சபையின் பொருளியல் மூலோபாய பிரதிப் பொது முகாமையாளர் நிஹால் வீரரட்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணங்கள் உயர்வு
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“புதிய விலை திருத்தம் காரணமாக ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல்கள் குறித்து தெளிவுபடுத்தி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படும்.
இலங்கை மின்சார சபையின் பணியாளர்களின் ஆண்டுக்கான வரப்பிரசாதங்கள் தொடர்பில் சபை தீர்மானிக்குமே தவிர, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானிக்க முடியாது”என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.