சிகிரியாவில் இரவு நேர சுற்றுலா : அரசாங்கத்தின் புதிய திட்டம்
பௌர்ணமி நாட்களை அண்டிய நிலவொளி நாட்களில் சிகிரியா (Sigiriya) மலைக்குன்றில் பொழுதைக் கழிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
அதன்பிரகாரம் பௌர்ணமி நாளுக்கு முந்திய இரண்டு நாட்கள், பௌர்ணமி நாள், பௌர்ணமி நாளுக்குப் பிந்திய இரண்டு நாட்கள் என்று மாதம் தோறும் ஐந்து நாட்கள் மட்டும் இரவு நேரங்களில் சிகிரியா மலைக்குன்றில் ஏற சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
அதற்கான தனியான கட்டணம் ஒன்றும் நிர்ணயிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிகிரியாவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி, அப்பிரதேசத்தின் குடிநீர் வசதிகளை அதிகரித்தல், முதலுதவி நிலையங்கள் அமைத்தல் குறித்தும் சுற்றுலாத் துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
