ரிஷாத்தின் வீட்டில் எரியுண்டு பலியான சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றுக்கு! செய்திகளின் தொகுப்பு
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டிலிருந்த 16 வயது சிறுமி தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொலிஸாருடன் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேற்படி சிறுமியை கடந்த வருடம் டயகம பிரதேசத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு அழைத்து சென்ற நபரிடம் இன்று வாக்குமூலம் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுமியின் தாய் மற்றும் ரிசாட் பதியுதீனின் மனைவியினது தந்தை ஆகியோரிடம் நேற்று(18) மேலதிக வாக்குமூலம் பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான இரவு நேர செய்திகளின் தொகுப்பு,