அடுத்தக்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை! கேள்விக்குறியாகும் காசாவின் நிலை
பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான அடுத்தக்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும், ஒப்பந்தத்தை கடைபிடிப்பது மட்டுமே இஸ்ரேலுக்கு ஒரேவழி என்றும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டத்திற்கான போர் நிறுத்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படாத நிலையில், போர் நிறுத்தம் தொடருமா? அல்லது இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் 20 ஆம் திகதி பதவி ஏற்க இருந்த நிலையில் அதற்கு முதல் நாள் அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தராக செயல்பட்டு இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை கொண்டு வந்தனர்.
33 பணயக் கைதிகள்
இந்த போர் நிறுத்தம் 6 வாரம் ஆகும். இந்த 6 வாரத்தில் 33 பணயக் கைதிகள் (இதில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் அடங்கும்) விடுவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் இறுதிக்கட்டமாக இன்று நான்கு பணயக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.
பாலஸ்தீனர்கள் - இஸ்ரேல்
இதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள 600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதன்படி அடுத்த கட்டத்திற்கான போர் நிறுத்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை.
இதனால் போர் நிறுத்தம் தொடருமா? அல்லது இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |