இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கும் நியூசிலாந்து
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தொடர்வதால் இலங்கை எதிர்பாராத கொத்தளிப்பான ஒரு காலக்கட்டத்தை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தலைவர்களின் நடவடிக்கைகளை கண்டிக்குமாறு கோரி நியூசிலாந்திலுள்ள இலங்கையர்கள் நியூசிலாந்து அரசாங்கத்திடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
இதன்போதே நியூசிலாந்து பிரதமர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் தற்போதைய நிலைமைகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். இது தொடர்பில் மேலதிக விபரங்களை அறிய நாம் காத்திருக்கிறோம்.
இலங்கை மக்களின் அதிகரிக்கும் விரக்தியை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அரசியல் ரீதியாக இது மிகவும் கொந்தளிப்பான காலக்கட்டம்.
இலங்கையின் பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை நியூசிலாந்து மிகுவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
அத்துடன் சகல அரசியல் கட்சிகளும் தொடர்ந்து இலங்கையில் நிலையான தீர்வுக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
