கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்! செய்திகளின் தொகுப்பு
கோவிட் வைரஸ் தொற்றினால் ஆபத்தான நிலைமைக்கு உள்ளாகியுள்ள கர்ப்பிணிப் பெண்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டுமென மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
மேலும் கோவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று கர்ப்பிணித் தாய்மார்கள், தற்போது தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் தலைவர் டாக்டர் பிரதீப் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணித் தாய், ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இத்தகைய சூழ்நிலையில் தாய்மார்கள், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும் எனவும் பிரதீப் டி சில்வா கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,