நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்! சுகாதாரத் துறை எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
மக்கள் கோவிட் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களுக்கு இணங்கவில்லை என்றால், நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சுகாதாரத் துறையால் பரிந்துரைக்கப்படுவதாக பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் மருத்துவர் எஸ்.எம். அர்னால்ட் கூறியுள்ளார்.
மேலும் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் நபர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாக தொற்று ஏற்பட்டிருப்பின் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண இது உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,