ரஞ்சன் “இலங்கையின் சொத்து” - எதிர்க்கட்சித் தலைவர் புகழாரம்: செய்திகளின் தொகுப்பு
ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் சொத்தாவார், அவருக்கு நியாயம் கிடைப்பதற்காக ஜனநாயக ரீதியிலும், சட்ட ரீதியிலும், அரசியலமைப்பிற்கு இணங்கவும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அங்குணுபெலஸ்ஸ சிறைச்சாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், பிறந்துள்ள சித்திரை புத்தாண்டு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சிறந்ததாக அமைய வாழ்த்துவதற்காக அவரை பார்வையிட வந்தோம்.
அவருக்காக எதிர்வரும் நாட்டில் ஜனநாயக ரீதியிலும், சட்ட ரீதியிலும், அரசியலமைப்பிற்கு அமையவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,