யாழில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் தொடர்பாக சிறீதரனிடம் மனு கையளிப்பு
நெடுந்தூர சேவைகளுக்காக யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (27) ஆரியகுளம் பகுதியில் உள்ள, வரையறுக்கப்பட்ட யாழ். மாவட்ட தூர சேவைப் பேருந்து உரிமையாளர்களின் கம்பனி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
மனு கையளிப்பு
இதனையடுத்து, வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர்களும், அவர்களை பிரதிபலிக்கும் சங்கங்களும் குறித்த மனுவை சிறீதரனிடம் வழங்கியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர போக்குவரத்து சேவை தொடர்பான பிரச்சனைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தருமாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
