சஜித்தை நேரில் சந்தித்து பேச்சு நடத்திய ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி (Photos)
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ ப்ரான்ஸுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (30.08.2023) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இலங்கையில் தனது பணியை ஏற்றுக்கொண்டதன் நிமித்தமே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தற்போதைய நிலை
இதன்போது இலங்கையின் சமூக பொருளாதார அரசியல் விடயங்கள் தொடர்பில் இருவருக்கும் இடையில் பல கருத்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

நாட்டில் நிலவி வரும் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பாக சஜித் பிரேமதாச ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப்
பிரதிநிதிக்குத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல்களை ஒத்திவைத்து
அடிப்படை உரிமைகளை மீறி வருவது தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

