பௌத்தமகாநாயக்கர்கள் விடுத்த வேண்டுகோள்களிற்கு பதில் அளிக்காத அரசாங்கம்: ஒமல்பே சோபித தேரர் கவலை
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த பௌத்தமகாநாயக்கர்கள் விடுத்த வேண்டுகோள்களிற்கு அரசாங்கம் இன்னமும் பதில் அளிக்கவில்லை என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் இடம்பெற்றுள்ள அரசமைப்பிற்கு முரணான சிலவிடயங்களை மாற்றவேண்டும் அல்லது புதிய சட்டமூலத்தை உருவாக்கவேண்டும் என பௌத்த மகாநாயக்கர்கள் உட்பட பலதரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோள்களிற்கு இதுவரை பதில் வழங்கப்படாமை குறித்து ஒமல்பே சோபித தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சட்டமூலம்
பௌத்தமத பீடாதிபதிகள் மாத்திரமின்றி சிவில் சமூகத்தினர் உட்பட பல தரப்பினர் குறிப்பிட்ட சட்டமூலம் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர் . ஜனாதிபதி உட்பட உரிய தரப்பினரிடம் அதனை தெரிவித்துள்ளனர். எனினும் இதற்கு அதிகாரிகள் பதிலளிக்காதது கவலையளிக்கும் விடயம் எனவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
உத்தேச சட்டமூலம் பொலிஸார் பயங்கரவாதத்திற்கு தங்கள் விருப்பத்தின்படி அர்த்தம் கொடுக்கும் நிலையை ஏற்படுத்தும் எனவும் இதன் காரணமாக பொதுமக்களிற்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படும் எனவும் ஒமல்பே சோபிததேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
