மைக்கேல் ஜாக்சன் மீது புதிய பாலியல் முறைபாடு - 4 உடன்பிறப்புகள் தொடர்ந்த வழக்கு
மறைந்த பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் மீது, ஒரு காலத்தில் அவருக்கு ஆதரவாக இருந்த காசியோ (Cascio) குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உடன்பிறப்புகள் அதிர்ச்சியூட்டும் பாலியல் முறைபாடுகளைத் தெரிவித்துள்ளனர்.
எட்வர்ட், டொமினிக், ஆல்டோ காசியோ மற்றும் மேரி-நிக்கோல் போர்டே ஆகிய நால்வரும் கலிபோர்னியாவில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.
தாங்கள் 7 அல்லது 8 வயது சிறுவர்களாக இருந்தபோது, ஜாக்சன் தங்களைத் திட்டமிட்டு வசப்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஜாக்சனின் சொத்து நிர்வாகம்
2019-ஆம் ஆண்டில் இந்த விவகாரத்தை மறைக்க, ஜாக்சனின் சொத்து நிர்வாகம் (Estate) தங்களுக்கு தலா 6,90,000 டொலர் வீதம் 5 ஆண்டுகள் பணம் தர முன்வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது 'லீவிங் நெவர்லேண்ட்' (Leaving Neverland) ஆவணப்படம் வெளியான பிறகு நடந்த பேச்சுவார்த்தை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
உண்மையைச் சொன்னால் திவாலாக்கி விடுவோம் என ஜாக்சன் தரப்பு தங்களை மிரட்டியதாகவும், பணத்தையும் புகழையும் பயன்படுத்தி தங்களைத் தனிமைப்படுத்தியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜாக்சன் தரப்பு வழக்கறிஞர்கள்
மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது குழந்தைகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு உடன்பிறப்புகள் கலிபோர்னியாவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சிறுவர்களாக இருந்தபோது ஜாக்சனின் 'நெவர்லேண்ட்' பண்ணை மற்றும் வெளிநாட்டுப் பயணங்களின் போது இந்தத் துன்புறுத்தல்கள் நடந்ததாக அவர்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக ஜாக்சனைப் பகிரங்கமாக ஆதரித்த இந்தக் குடும்பத்தினர், தற்போது உண்மையை மறைக்க தங்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜாக்சன் தரப்பு வழக்கறிஞர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு, இது பணத்திற்காகத் தொடரப்பட்ட வழக்கு என்று கூறியுள்ளனர்.