சுற்றுலாத் துறை ஊழியர்களுக்கு அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய திட்டம்
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனிநபர்களுக்கு இந்த ஆண்டு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க (Ruwan Chaminda Ranasinghe ) அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05) அமைச்சர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணை அமைச்சர், சுற்றுலாத் துறை ஊழியர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட சமூக நலத் திட்டத்திற்கான திட்டங்களையும் வெளிப்படுத்தினார்.
சுற்றுலாப் பயணிகளுக்காக ஓய்வு மையங்கள்
கூடுதலாக, எதிர்கால மேம்பாட்டிற்காக 100 சுற்றுலா தலங்களை அடையாளம் காணும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒவ்வொரு தளத்திற்கும் ரூ. 10 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுற்றுலாப் பயணிகளுக்காக ஓய்வு மையங்களை நிர்மாணிக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam