மட்டக்களப்பின் வாகரைப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஊக்குவிக்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த திட்டமானது கூட்டுறவுச் சங்கங்களின் பாரம்பரிய உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நிகழ்வுகள் நேற்று (11.06.2024) இடம்பெற்ற போதே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாய உற்பத்திகள்
இந்நிலையில், வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் அதிகளவான இயற்கை வளங்கள் காணப்படுவதோடு சுற்றுச் சூழலைப் பாதுகாத்துக் கொண்டு உள்ளுர் வளங்களை அதி உச்சத்தில் பயன்படுத்தி நஞ்சற்ற விவசாய உற்பத்திகளை மேற்கொள்ள உள்ளுர் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டு வருவதாக வாகரை உதவிப் பிரதேச செயலாளர் அர்ச்சனா புவேந்திரன் தெரிவித்துள்ளார்.
சமகாலத்தில் இரசாயனங்கள் கலந்த தேகாரோக்கியத்தைப் பாதிக்கும் உற்பத்திகள் பெருகிவிட்டன. இவற்றை உட்கொள்வதால் நாமும் நமது எதிர்கால சந்ததியும் உடல் ஆரோக்கியமற்றவர்களாக ஆகக் கூடிய நிலைமை உள்ளது.
எனவே நிலவளமும் நீர் வளமும் சேதன வளமும் நிறைந்துள்ள வாகரைப் பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் பிரதேச மக்கள் அதிகூடிய வருமானத்தை ஈட்டிக் கொள்ள ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாரம்பரிய உள்ளுர் உற்பத்திகளின் விற்பனை ஊக்குவிப்பு நிகழ்வுகளில்
வாகரைப் பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.சுதர்ஷன் உட்பட இன்னும்
பல அதிகாரிகள, பொதுமக்கள், கிராம மட்டக் கூட்டுறவுச் சங்கங்கள், பொது
அமைப்புக்களின் பிரதிநிதிகள், சூழல் சுற்றாடல் ஆர்வலர்கள் கூட்டுறவு அமைப்பின்
உள்ளுர் உற்பத்தியாளர்க, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் வெளிக்கள
அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
