மீண்டும் பிரதமராவது தொடர்பில் மகிந்தவின் எண்ணம்! வெளியான தகவல்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்ற செய்தி உண்மையல்ல என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெளியான தவறான தகவல்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அவ்வாறான விடயம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவில்லை.
நிச்சயமாக, அவர் பிரதமராக இருந்தார். பிரதமராக இருக்கும் போது, நாட்டில் பல்வேறு குழப்பங்கள் நிலவின. அப்போதைய ஜனாதிபதியால் கொந்தளிப்பு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை, அவர் பதவி விலக முடிவு செய்தார் என்று நான் கூறுவேன்.
அவர் பிரதமராக, ஜனாதிபதியாக இருந்து நாட்டை மீண்டும் ஒருங்கிணைத்த ஒரே தலைவர். அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு வர விரும்பவில்லை என்று நான் நினைக்கவில்லை. அதெல்லாம் தவறான தகவல்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
