புதிய ஜனாதிபதியாக அநுர பதவிப் பிரமாணம்! காலிமுகத்திடல் பகுதியில் திரண்ட ஆதரவாளர்கள்
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அநுரகுமார திசாநாயக்கவின் ஆதரவாளர்கள் பலர் காலிமுகத்திடல் பகுதியில் திரண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாடு அநுரவிற்கே என்ற வாசகம் அடங்கிய பதாதைகள் மற்றும் இலங்கையின் தேசியக் கொடியுடன் உற்சாகமான வரவேற்பை வழங்கியுள்ளனர்.
மகிழ்ச்சி ஆரவாரம்
அத்துடன் புதிய ஜனாதிபதியான அநுரவிற்கு ஆதரவான கோசங்களையும் எழுப்பி தமது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 21ஆம் திகதி நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளின் படி இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று இரவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam