அரச நிறுவனங்களில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
விடுமுறை விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட அரசாங்க உள் அதிகாரத்துவ பரிமாற்றங்கள் இணைய அலுவலக மேலாண்மை அமைப்பு மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுச் செலவைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, இணையம் மூலமான அலுவலக முகாமைத்துவ முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கையை வெளியிட்டார்.

இணைய முறையை நடைமுறை
அமைச்சின் உள்விவகாரப் பிரிவு மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாவட்டச் செயலகங்களுக்குள் முன்னோடித் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் நாடளாவிய ரீதியில் இந்த இணைய முறையை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த திட்டம் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவினால் (SLCERT) பாதுகாப்பான திட்டமாகவும் சான்றளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற கோரிக்கைகள் மற்றும் பணிகளைச் செயல்படுத்தும் போது, தேவையற்ற அச்சிடுதல் செலவினங்களைக் குறைத்து, பொதுச் செலவினங்களைக் குறைக்குமாறும் மாவட்டச் செயலகத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வேலைக்கு விடுப்பு அல்லது வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்கான அத்தியாவசிய மாதாந்த மற்றும் வருடாந்த சுருக்கங்களை மட்டும் அச்சிட்டு, அவற்றை தொடர்புடைய கோப்புகளில் வைத்திருப்பது போதுமானது மாயாதுன்னே கூறியுள்ளார்.
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam