விமல் வீரவன்ச தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணி
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் (Wimal Weerawansa) தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியை மையமாகக் கொண்டு புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
குறித்த கூட்டணியில் மொட்டுக் கட்சியின் அதிருப்தியாளர்களான சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டளஸ் அலஹப்பெரும, சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மொட்டுக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
மேற்குறித்த புதிய அரசியல் கூட்டணியின் மே தினக் கூட்டம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி கொழும்பு - கிருலப்பனையில் (Kirulapone) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்
அதன்போது தேசிய சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்படவுள்ளது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
