பெருந்தோட்டத் துறைக்கு நிலையான வருவாயை உறுதி செய்ய புதிய திட்டம்
பெருந்தோட்டத் துறைக்கு நிலையான வருவாய் மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தோட்டத் தொழிலாளர்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரங்களின் நீடித்த நிலையை கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா மற்றும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இந்த திட்டம் முன்வைக்கப்பட்டது.
இறுதி திட்டத்தின் 1105 ரூபா நாள் மொத்த வேதனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநரம் உற்பத்தித்திறன் மற்றும் ஊக்க கொடுப்பனவு என்பன மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி அடிப்படை ஊதியம் 700 ரூபா, ஊழியர் சேமலாப நிதிக்கொடுப்பனவு 105 ரூபா, வருகை ஊக்கத்தொகை ரூ.150 மற்றும் உற்பத்தித்திறன் ஊக்கத்தொகை ரூ.150 என்று வகுக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் கீழ், தொழிலாளர்களின் மாத வருமானத்தில் 6,250 ரூபா அதிகரிப்பு ஏற்படும் என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam