கோவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய முறை அறிமுகம்!
மேல் மாகாணத்தில் அறிகுறிகளின் தீவிரத்திற்கு ஏற்ப கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய முறை நிறுவப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் இதனை தெரிவித்துள்ளது.
புதிய சிகிச்சை முறையானது நோயாளிகளை கோவிட் சிகிச்சை மையங்களுக்கு மாற்றவோ அல்லது வீட்டிலேயே பராமரிக்கவோ பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் உரிய தகவல்களுடன் 1904 என்ற சிறப்பு இலக்கத்திற்கு குறும்செய்திகளை அனுப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நோயாளிக்கு மூச்சுத் திணறல் உள்ளதா, நோயாளி அறிகுறியற்றவராக இருந்தால் விபரங்கள். நோயாளியின் வயது, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் முகவரி ஆகியவை அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
பெறப்பட்ட விவரங்கள் சம்பந்தப்பட்ட கோவிட் சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்படும் மருத்துவர்கள் குழுவுக்கு கோவிட் -19 தொற்றுநோய் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தால் சமர்ப்பிக்கப்படும்.
மருத்துவர்கள் நோயாளியின் நிலைகளை வகைப்படுத்தி, அவர்கள் பெற்ற விவரங்களை சரிபார்க்க 247 என்ற சிறப்பு இலக்கம் மூலம் தொடர்புகொள்வார்கள், அதன் பிறகு அந்த நோயாளிகள் கோவிட் -19 சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் பிற சிகிச்சை வசதிகள் வழங்கப்படும். வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டிய நோயாளிகள், தேவையான சேவைகளை வழங்கும் வைத்தியர்கள் குழுவால் தொடர்ந்து தொடர்பு கொள்ளப்படுவார்கள்.
இந்த சேவைக்கு ஒரு சிறப்பு எண் 1390 ஒதுக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் மட்டுமே சேவை வழங்கப்படும்.
