பிரான்ஸில் நடைமுறையாகும் புதிய சட்டம்: புத்தாண்டு தினத்திலிருந்து அமுல்
பிரான்ஸில் மற்றுமொரு புதிய சட்டமாகப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பிளாஸ்டிக் பொதியிடலை தடைசெய்யும் நடைமுறை இன்றிலிருந்து நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளரி, எலுமிச்சை மற்றும் ஒரஞ் உள்ளிட்ட 30 வகைகளில், பிளாஸ்டிக்கில் சுற்றப்படத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பெரிய பொதிகள் மற்றும் நறுக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட பழங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை பிளாஸ்டிக் பொதியிடல் செய்து விற்கப்படுவதாகக் கருதப்படுகிறது,
இந்தத் தடையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பில்லியன் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும் என அரசாங்க அதிகாரிகள் நம்புகின்றனர்.
