பிரித்தானியாவில் AI தொழில்நுட்பத்திற்கு எதிராக புதிய சட்டம்
பிரித்தானியாவில் குழந்தைகளை தவறான முறையில் காட்டக்கூடிய செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence - AI) தொழில்நுட்ப மென்பொருட்கள் மற்றும் வலைத்தளங்களை தடை செய்வதற்கு புதிய சட்டமொன்றை பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் முதல் நாடாக பிரித்தானியா அமையவுள்ளது.
கடந்த ஆண்டு AI மூலம் உருவாக்கப்பட்ட குழந்தைகளை தவறான முறையில் சித்தரிக்கும் புகைப்படங்கள் 2023ஆம் ஆண்டை விட ஐந்து மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் அதிகாரங்கள்
குழந்தைகளின் உண்மையான புகைப்படங்களை தவறான முறையில் மாற்றி வடிவமைக்கும் இவ்வாறான தொழில்நுட்பம் மனிதவியலுக்கும், சமூக நலத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இந்நிலையில், இவ்வாறான புகைப்படங்களை உருவாக்கக்கூடிய மென்பொருட்கள் மற்றும் வலைத்தளங்களை முடக்க புதிய அதிகாரங்களை பிரித்தானிய அரசாங்கம் பெற உள்ளது.
முன்னதாக, 'Deepfake' தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களை தவறான முறையில் மாற்றியமைப்பது பிரித்தானியாவில் குற்றமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 10 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் "Z" எழுத்துக்கள் நடுவே மறைந்திருக்கும் இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

மனைவியால் போதுமான துன்பம் அனுபவிக்கிறார்... அதை செய்வதில்லை: ஹரி தொடர்பில் மனம் மாறிய ட்ரம்ப் News Lankasri
