புதிய தொழிலாளர் சட்டம் குறித்து பொதுசன அபிப்பிராயம் அவசியம்: தொழிற்சங்கங்கள் கோரிக்கை
அரசாங்கம் கொண்டுவரவுள்ள தொழிலாளர் சட்டத் திருத்த சட்டமூலம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிய வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று (26.06.2023) நடைபெற்ற தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் அமைச்சரினால் நீக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
தொழிலாளர் சட்டத் திருத்தச் சட்ட வரைபைத் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக்கு வழங்கிய பின்னர், அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் தெரிவிக்கவுள்ளன.
தொழில் அமைச்சர் நடவடிக்கை
மேலும், தொழிலாளர் ஆலோசனை சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் அதிலிருந்து நீக்கப்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்கு ஒரு சுயாதீனமான மற்றும் வெளிப்படையான ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
தொழிலாளர் வர்க்க இயக்கத்தை அழிவுக்குக் கொண்டு செல்லும் அரசின் திட்டங்களை முறியடிக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் வேறுபாடுகள் மற்றும் பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச்சேவை ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்க்ஸ் இந்த கூட்டின் அழைப்பாளராக ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பணியிடத்தில் தொழில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அரசாங்கம், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் பராமரிக்கப்படும் முத்தரப்பு சங்கமாகக் கருதப்படும் தேசிய தொழிலாளர் ஆலோசனைக்குச் சபையில் இருந்து நான்கு முக்கிய தொழிற்சங்கங்களை நீக்குவதற்குத் தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
வருடாந்தக் கூட்டங்கள், கிளைச் சங்கங்கள் மற்றும் வருடாந்த மற்றும் மாதாந்த அறிக்கைகளை முறையாகப் பராமரிக்காத மற்றும் உறுப்பினர்கள் ஆயிரத்தை எட்டாத தொழிற்சங்கங்கள் ஆலோசனை சபையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிவித்திருந்தது.
சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம், இலங்கை வர்த்தகம், கைத்தொழில் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் மற்றும் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் ஆகியன, தொழில் அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய அகற்றப்பட்டுள்ளன.
தொழில் அமைச்சரைப் பிரதான பிரதிவாதியாகக் குறிப்பிட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அமைச்சரின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம் கோருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
