மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு புதிய நீதியரசர்கள் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதியரசர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய, மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி.தோட்டவத்த, ஆர்.ஏ.ரணராஜா மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி.கோபல்லவ ஆகியோருக்கு பதவி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
107ஆவது பிரிவு
அதேவேளை, அரசியலமைப்பின் 107ஆவது பிரிவிற்கு அமைய இந்த நியமனங்களை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, மேன்முறையீட்டு நீதிமன்றில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நான்கு பேரின் பெயர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழிந்திருந்தார்.
அந்த பெயர்ப்பட்டியலில், மூத்த மேல் நீதிமன்ற நீதிபதிகளான குலதுங்க, தோட்டவத்த மற்றும் ரணராஜா ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த வெற்றிடங்களுக்கு மேற்குறிப்பிட்ட நால்வருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri