புதிதாக அறிமுகமாகும் குறியீடு! நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
சில பொருட்களுக்கு சுங்க குறியீடு எனப்படும் HS குறியீடு புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
142 புதிய வகை பொருட்களுக்கு இவ்வாறு சுங்க குறியீடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி - ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த குறியீடு கொண்டு வரப்படவுள்ளது.
அத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.