கிளிநொச்சியில் இராணுவத்தினரால் புதிய வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளன
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட முக்கொம்பன் பகுதியில் வீட்டுத் தேவையுடைய வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இரு குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினரின் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் சமூக திட்டத்தின்படி கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடமிருந்து கிடைக்கப் பெற்ற நிதியின் மூலம் கிளிநொச்சி முக்கொம்பன் பகுதியில் வசிக்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கான புதிய வீடு 20வது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர், 66வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல், அஜித் திஸாநாயக்க, 662 பிரிகேட் தளபதி சமிந்த லியானகே மற்றும் படையினர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்குக் கிடைக்கப் பெற்ற நிதி உதவியுடன் விஜயபாகு காலாட் படை படைப்பிரிவினரால் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் கமலாஸ் பெர்னாண்டோ எனும் வறிய குடும்பத்திற்கான புதிய வீடொன்றும் நிர்மாணிக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.