முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அ.உமாமகேஸ்வரன் பொறுப்பேற்றார் (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அருளானந்தம் உமாமகேஸ்வரன் தனது கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.
இன்றைய தினம் (09.07.2023) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தனது கடமையினை ஆரம்பித்துள்ளார்.
பல உயர்பதவிகளை வகித்தவர்

அருளானந்தம் உமாமகேஸ்வரன், மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையினை பொறுப்பேற்க முன்னர் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றியுள்ளார். மேலும், அரச பணியில் பல உயர்பதவிகளை வகித்துள்ளார்.
ஆரம்பக் கல்வியினை யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையிலும், இடைநிலை கல்வியினை கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பயின்று, வர்த்தக பிரிவில் அதி சிறப்புச் சித்தி பெற்று உயர்கல்வியினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக பீடத்தில் தொடர்ந்து, முதுநிலை கல்வியினை கொழும்பு ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |













குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam