வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்
முன்னாள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கலைநாதன் ராகுலன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் முன்னர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றியிருந்தார்.
இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிர்வாக மாணி பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.
முன்னர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமைகளை ஏற்றுச் சிறப்பாகச் செயற்பட்டிருந்ததோடு, மக்களுக்குத் திருப்திகரமான சேவையை வழங்கும் வைத்தியசாலையாக மாற்றுவதில் பெரும்பங்காற்றியவர்.
கோவிட் நோய்த்தொற்று காலத்தில் சிறப்பான நிர்வாகத்தை வழங்கியதுடன், நோயாளர் மற்றும் ஊழியர்களது பாதுகாப்பில் அதிக கரிசனை கொண்டிருந்தார்.
தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக
நியமிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கோவிட்
தடுப்பு இணைப்பாளராகவும் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.