இந்தியாவில் பதிவான புதிய வகை கோவிட் வைரஸ்
இந்தியா கேரளாவில் தற்போது கோவிட் வைரஸின் புதிய திரிபான ஜே.என்.1 வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புதிய வைரஸ் திரிபு மேல் சுவாசக் குழாயை பாதிக்கும் என்றும், காய்ச்சல், இருமல், சோர்வு, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, தலைவலி போன்றவை முக்கிய அறிகுறிகளாக தென்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பல நாடுகளில் பரவும் எச்சரிக்கை
இந்தப் புதிய கோவிட் திரிபு வேகமாகப் பரவும் ஆபத்து உள்ளதாகவும், அதனால் அதுகுறித்து தொடர் கண்காணிப்பும் ஆய்வும் தேவை எனவும் குறிப்பிடப்படுகிறது.
தற்போது பரவும் ஜே.என்.1 வைரஸ் திரிபு, கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.
மேலும் இந்த வைரஸ் திரிபு தற்போது சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam