விரைவில் வட்ஸ்ஸப்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய மாற்றங்கள்
வட்ஸ்ஸப்பில் செயலில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குனர் மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வட்ஸ்ஸப்பில் தனியுரிமை(பிரைவசி) அம்சங்கள் பல அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்ஸ்ஸப் குழுக்களில் இருந்து நீங்கள் விலகுவதை இனி பிறர் அறியமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வட்ஸ்ஸப்பில் பிரைவசி அம்சங்கள் தொடர்பில் மெட்டா நிறுவனம் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.
இம்மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும்

இதையடுத்து அவ்வப்போது பிரைவசி அப்டேட் அளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் வட்ஸ்ஸப் குழுக்களில் இருந்து நீங்கள் விலகும்போது அந்த தகவலை பிறர் அறியமுடியாத வகையில் புதிய அம்சம் கொண்டுவரப்பட இருக்கிறது.
அதே போல நீங்கள் ஒன்லைனில் இருக்கிறீர்களா என்பதை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மறைக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மார்க் அறிவித்திருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல், ஒருமுறை மட்டுமே பார்க்கும்படியான செய்திகளை (view once messages) ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாதபடி புதிய அப்டேட்டை அளிக்க இருப்பதாகவும் மார்க் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்புதிய அப்டேட் இந்த மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam