ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியவர்களுக்கு எதிராக புதிய வழக்கை தொடுக்க வேண்டும்-அனுர

Anura Kumara Dissanayaka Maithripala Sirisena Supreme Court of Sri Lanka Easter Attack Sri Lanka
By Steephen Jan 13, 2023 07:09 AM GMT
Report

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய தரப்பினர் இழப்பீடுகளை செலுத்துவது மாத்திரம் போதுமானதல்ல எனவும் அவர்களுக்கு எதிராக புதிய வழக்கை தொடர சட்டமா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் முக்கியமானது

அனுரகுமார திஸாநாயக்க

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தாக்குதலை தடுக்க தவறிய தரப்பினருக்கு இழப்பீடு செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

எனினும் தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பாக புதிய வழக்கை தொடர வேண்டியது அவசியம். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மிகவும் முக்கியமானது.

இந்த தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய இரண்டு பிரதான தரப்புகள் உள்ளன. தாக்குதலை தடுக்க தவறிய ஒரு தரப்பும், தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் தரப்பும் உள்ளன.

மைத்திரிபால சிறிசேன

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய தாக்குதலை தடுக்க உயர்மட்ட அரசியல் தரப்பும், அதிகாரிகளும் தமது பொறுப்பை நிறைவேற்றவில்லை என்பது மிகவும் தெளிவாகியுள்ளது.

இதனடிப்படையில், தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பாக புதிய வழக்கை தொடர்வதற்கு தேவையான சான்றுகள் கிடைத்துள்ளன. சட்டமா அதிபர் உடனடியாக புதிய வழக்கை தொடர வேண்டும் என்பதுடன் மண்ணில் புதைந்து மறைந்து போக இடமளிக்காது தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வர வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US