ரோஹிதவிற்கு வழங்கப்பட்டுள்ள நியமனம்
Sri Lanka
United Kingdom
By Mayuri
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவிற்கு நியமனமொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர் பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனமானது எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கடமையாற்றும் சரோஜா சிறிசேன அந்தப் பதவியிலிருந்து விலகவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோஹித வகித்த பதவிகள்
ரோஹித போகொல்லாகம கடந்த 28 ஜனவரி 2007 முதல் 8 ஏப்ரல் 2010 வரை வெளியுறவு அமைச்சராக செயற்பட்டிருந்தார்.
மேலும் 2017 ஜூலை முதல் 2018 டிசம்பர் வரை கிழக்கு மாகாண ஆளுநராகவும் பணியாற்றியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US