விரைவில் இறுதி செய்யப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைவு விரைவில் இறுதி செய்யப்படும் என்று குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தெரிவித்தார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையில் நீதி அமைச்சில் கூடியது.
குழுவின் அடுத்த கூட்டம்
மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நெரின் புல்லே, சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் அசங்க கரவிட்ட, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் (சட்டம்) பியமுந்தி பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் சட்ட அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சந்துன் குணவர்தன, லெப்டினன்ட் கேணல் மெண்டிஸ் மற்றும் பிற உயர் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்கான குழு இதுவரை 14 முறை கூடியுள்ளது.
குழுவின் அடுத்த கூட்டம் 22 ஆம் திகதி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 22 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
