உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய அறிவித்தல்
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் நாட்டின் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரிப் பத்திரங்களுக்குச் சந்தா செலுத்தியவர்களுக்கு, அந்த முதலீடுகளிலிருந்து பெறப்படும் வட்டிக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (Inland Revenue Department) அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம், அதன் சர்வதேச பத்திர மறுசீரமைப்பு பயிற்சியின் முடிவை அறிவித்த ஒரு நாளுக்குப் பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திறைசேரி பத்திரங்களின் வட்டிகள்
இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மை கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளில் ஒன்றாகும்.
இந்தநிலையில், மறுசீரமைப்பை அடுத்து, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட எந்தவொரு சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிக்கும், திறைசேரி பத்திரம் மற்றும் திறைசேரி பத்திரங்களின் வட்டிகள் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
