பிலிப்பைன்ஸ் ஆளுநர் சுட்டுக் கொலை: ஜனாதிபதி கண்டனம்!
பிலிப்பைன்ஸ் - நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாண ஆளுநர் ரோயல் டெகாமோ (Roel Degamo) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (04.03.2023) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்ததுள்ளார்.
மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாணத்தின் ஆளுநரான 2011ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தவர் ரோயல் டெகாமோ.
இனந்தெரியாத நபர்கள்
இவர் நேற்றைய தினம் தனது சொந்த ஊரான பாம்ப்லோனா நகரில் மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதன்போது அங்கு இராணுவ உடையில் வந்த சில இனந்தெரியாத நபர்கள், தங்களது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட ஆரம்பித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கண்டனம்
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஆளுநர் ரோயல் டெகாமோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் சிலரும் காயமடைந்துள்ளனர். பொது நிகழ்ச்சியின்போது ஆளுநர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பிலிப்பைன்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
